கிண்ணியா முகமது பிராஸ் அவர்களுக்கு, லெப்டினன்ட் (Lieutenant) பதவி உயர்வு
KinniyaPiras
இலங்கை தேசிய கடெட் படை (National Cadet Corps) அமைப்பைச் சேர்ந்த முகமது பிராஸ் (Mohomed Piras) அவர்களுக்கு, லெப்டினன்ட் (Lieutenant) பதவிக்கு உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க வர்த்தமானி (Gazette Notification) மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தேசிய கடெட் படையில் சிறப்பான சேவையும், ஒழுக்கமும், தலைமைத்துவ திறமையும் வெளிப்படுத்தியதற்கான அங்கீகாரமாக இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பதவி உயர்வு, அவருடைய குடும்பத்திற்கும், கடெட் படையினருக்கும், முழு சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.
தேசிய கடெட் படையின் வளர்ச்சிக்கும், இளம் தலைமுறையின் ஒழுக்க மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டிற்கும் அவரது சேவை மேலும் வலுவாக அமையும் என்பதில் ஐயமில்லை.
லெப்டினன்ட் முகமது பிராஸ் அவர்களுக்கு கிண்ணியா நியூஸ் சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
